காரிமங்கலம் சந்தையில் கால்நடை விற்பனை சரிவு

காரிமங்கலம், நவ.27: காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வார சந்தை நடந்து வருகிறது. நேற்று நடந்த சந்தையில், 500க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்கு வந்தது. இதில் 300 மாடுகள் ₹20 ஆயிரம் முதல் ₹30ஆயிரம் வரை என மொத்தம் ₹38லட்சத்திற்கு விற்பனையானது. ஆடுகள் ₹4ஆயிரம் முதல் ₹6ஆயிரம் வரை என மொத்தம் ₹8.50லட்சத்திற்கு விற்பனையானது. தேங்காய் ₹7.50லட்சத்திற்கு விற்பனையானது. இதில் மொத்தம் ₹54லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. சபரி மலை சீசன் என்பதால், கால்நடைகள் விற்பனை சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: