வேலூர், நவ.22: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தண்டனை கைதி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜம்மாள்(65). இவர் கொலை வழக்கில் தண்டனை கைதியாக கடந்த 2015ம் ஆண்டு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மனநல குறைவால் பாதிக்கப்பட்ட ராஜம்மாள், சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் பெண்கள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறை அதிகாரிகள் சென்னைக்கு சென்றுள்ளனர்