×

தென்காசி மாவட்ட பணி இன்று முதல் தொடங்கும்

தென்காசி, நவ.22: தென்காசி மாவட்ட பணிகள் இன்று முதல் துவங்கும் என கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கூறினார். தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கூறுகையில், புதிய மாவட்ட துவக்க விழா நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் தொடர்பான பணிகள் இன்று (22ம் தேதி) முதல் துவங்கும், என்றார். முன்னதாக விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன், தச்சை கணேசராஜா, நெல்லை கலெக்டர் ஷில்பா, எஸ்பி சுகுணா சிங், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், தாசில்தார்கள் சண்முகம், அழகப்பராஜா,  மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் குமார்பாண்டியன், இலஞ்சி காத்தவராயன், நகர செயலாளர்கள் சுடலை, குட்டியப்பா, ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், பேரூர் செயலாளர்கள் கார்த்திக் குமார், கணேஷ் தாமோதரன், மயில்வேலன், சுசீகரன், அரசு வழக்கறிஞர் சின்னத்துரை பாண்டியன், சேர்மப்பாண்டி, குற்றாலம் சாமிநாதன், பட்டுப்பூச்சி பீர்முகமது, மகபூப் மசூது, குற்றாலம் சுரேஷ், வேம்பு என்ற ரவி, அகமதுஷா, வெள்ளகால் ரமேஷ், செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் மோகனகிருஷ்ணன் உட்பட கலர் கலந்து கொண்டனர்.

Tags : Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...