×

போக்குவரத்து விதி மீறிய 40 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, நவ. 22: உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம், விருத்தாசலம் சாலை, டோல்கேட், சேலம் ரோடு ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் லைசென்ஸ் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், ஹெல்மெட் அணியாமலும், குடிபோதையிலும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களை ஓட்டிச் சென்ற 40 வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...