கள்ளக்குறிச்சி, நவ. 22: சங்கராபுரம் அடுத்த பொன்பரபட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (51). இவர் கள்ளக்குறிச்சி மீன் மார்க்கெட் பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி தெரசா(41). இவர் அதே மீன் மார்க்கெட் பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார்.
மீன் வியாபாரி தெரசா ஜெயராமனிடம் மீன் கடனாக வாங்கிய வகையில் பாக்கி தொகை ரூ.50 ஆயிரம் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தொகையை தரும்படி ஜெயராமன் கேட்டுள்ளார்.
அப்போது தெரசா பாக்கி தொகை ரூ.10 ஆயிரம் மட்டும் தான் தரவேண்டி உள்ளது என கூறினாராம். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தெரசா மீன் வியாபாரி ஜெயராமனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மீன்வியாபாரிகள் தெரசா, ஜெயராமன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.