கிருஷ்ணகிரி, நவ.19: திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை, மினிலாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தனி தாசில்தார் பிரதாப், வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர், நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தினர். ஆனால், அந்த மினி லாரி நிற்காமல் வேகமாக சென்றது. இயைடுத்து அதிகாரிகள் அந்த லாரியை துரத்திச் சென்று நிறுத்த சொல்லியும் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில், பறக்கும் படையினர் சென்ற வாகனத்தை இடிக்க முயன்றனர். ஆனால், பறக்கும் படையினர் அந்த வாகனத்திற்கு முன்னால் சென்று, தங்களது வாகனத்தை குறுக்கே நிறுத்தினர்.