×

மண்டைக்காடு அருகே ஆட்டோ மாயம்

குளச்சல், நவ. 19: மண்டைக்காடு  புதூர் பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் மகன் ஏசுதாஸ்(28). இவர் வாடகை  ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தினமும் இரவு அப்பகுதியை சேர்ந்த லூயிஸ்  என்பவர் வீட்டு முன் தனது ஆட்டோவை நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் இரவு வழக்கம் போல ஆட்டோவை நிறுத்தி சென்றார். நேற்று  முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சவாரி செல்வதற்காக ஆட்டோவை எடுக்க வந்தார். அப்போது  ஆட்டோவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில்  விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதையடுத்து அவர் மண்டைக்காடு போலீசில்  புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : mandakkad ,
× RELATED தக்கலை, மண்டைக்காடு திருவிழாக்கள்...