கிருஷ்ணகிரி, நவ.12: கிருஷ்ணகிரியில் டூரிஸ்ட் மேக்ஸிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் கேட்டு, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், டூரிஸ்ட் மேக்ஸிகேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச்சங்க நிர்வாகிகள் முருகேசன், ரமேஷ்குமார், ஹரிபாலாஜி, ஜெயசீலன், டேவிட்ஆரோக்கியராஜ், செந்தில் உள்ளிட்டோர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய கலெக்டர், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை ஆகியோரது அனுமதியுடன் நாங்கள் எங்களது டூரிஸ்ட் மேக்ஸிகேப் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம்.