சென்னை: சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ஜோஸ் (61). ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 2016ம் ஆண்டு பூந்தமல்லி சாலை, மேவெலூர் குப்பம் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகத்தில் வந்த மற்றொரு பைக், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பால்ஜோஸ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பால்ஜோஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், 7 மாத தொடர் சகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில், கணவரின் இறப்பிற்கு இழப்பீடு கோரி, பால்ஜோஸ் மனைவி சிவகாமி, அவரது மகள் மற்றும் தந்தை, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.சுதா முன் விசாரணைக்கு வந்தது.