ஆவடி: ஆவடி அடுத்த கோயில்பதாகை, கிறிஸ்து காலனி, அன்னை தெரசா 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பாலசுப்பிரமணியம் (53). இவர், கடந்த 6 ஆண்டாக வீட்டில் பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். இவரது பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பரதநாட்டியம் கற்று வருகிறார். இவர், ஆவடி டேங்க்பேக்டரி பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 29ம் தேதி இச்சிறுமி பரதநாட்டியம் கற்பதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை தனியாக அழைத்து சென்று ஆசிரியர் ரவிசர்மா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சிறுமியின் பெற்றோர் உள்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரதநாட்டிய பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு இருந்த ஆசிரியர் ரவிசர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.