சென்னை : நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பள்ளிகொண்டான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெள்ளத்துரை. இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2014ம் ஆண்டு எனது மகன், மருமகள் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, எங்களை நாங்குநேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த நாககுமாரி அழைத்தார். விசாரணையின் போது நாங்குநேரி இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரநேசன், ஜீப் டிரைவர் ரமேஷ் ஆகியோர் சிலருடன் சேர்ந்து கொண்டு எனது சட்டையை பிடித்து தள்ளினர். மேலும், எனது மனைவியை பிடித்து இழுத்து கீழே தள்ளினர். எனது மகனை தாக்கினர். பின்னர், எங்கள் மீது நாங்குநேரி போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து என்னையும், எனது மனைவி, மகன் ஆகியோரையும் கைது செய்தனர். திருமண விவகாரம் தொடர்பான பிரச்னையை கையாளும் போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த வழிமுறைகளை பின்பற்றாமல் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.