தாம்பரம்: தாம்பரத்தில் உள்ள திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அழித்தனர்.மேற்கு தாம்பரம் கக்கன் தெருவில் வித்யா திரையரங்கம் உள்ளது. இங்கு காலை முதல் இரவு வரை என ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன. இந்த திரையரங்கிற்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து படம் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த திரையரங்கில் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால், அதை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு வாந்தி, தலை சுத்தல், மயக்கம் மற்றும் வயிற்று உபாதை ஏற்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அனுராதாவிடம் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.அவரது உத்தரவின் பேரில், தாம்பரம் மற்றும் பல்லாவரம் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விமலேஸ்வரன், ஜான் சிம்சன் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் அந்த திரையரங்கில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.