சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தில், 84,592 ச.அடி பரப்பளவில் ₹20.10 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணி அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த மண்டபத்தின் தரைத்தளத்தில் 552 நபர்கள் உணவருந்தும் வகையில் இருக்கைகள், நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை, முதல்தளத்தில் சுமார் 1,228 நபர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகிறது. பால்கனியில் சுமார் 160 அமரலாம். திருமண மண்டபத்தை பயன்படுத்துவோர் தங்குவதற்கு 12 அறைகளும், விருந்தினர் அறைகள், மணமகன், மணமகள் அறைகளும் அமைக்கப்படுகிறது.