சேலம், அக்.31: சேலத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் கால், விபத்தில் சிக்கி முறிந்தது. மேலும் மற்றொரு விபத்தில் பெண் பலியானார். சேலம் திருவாக்கவுண்டனூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (80). இவர் நேற்று காலை அஸ்தம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இறங்கி சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த பால் லாரி,வெள்ளையம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவரது 2 கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. வலியில் துடித்து கொண்டிருந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.