ஓமலூர், அக்.24: ஓமலூர் மற்றும் மாவட்டம் முழுக்க மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் அலட்சியம் அதிகரித்துள்ளது. பல மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை சாதாரண குப்பைகளுடன் சேர்த்து கொட்டி வருகின்றனர். இதனால், நீர்நிலைகள், மலைகள், சுற்றுப்புறங்கள் சுகாதார சீர்கேடுகளால் பல உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2008-ம் ஆண்டு மருத்துவ கழிவுகளை கையாளுவதற்காக கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், தொற்றுக்கிருமிகள் பரவி உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதில் ஓமலூர் பகுதியில் உள்ள மலை மற்றும் சாலையோர பகுதியில் தூக்கி வீசப்படும் மருத்துவக் கழிவுகள் அதிகம் கொட்டி கிடக்கிறது. அதில் ஊசியில் மற்றும் மாத்திரைகள் அதிகம் காணப்படுகிறது.