சென்னை:அசாமில் இருந்து சென்னை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக சென்னை என்ஐபி சிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் பூவிருந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் சோதனை சாவடி அருகே கடந்த 27-11-2017 அன்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 11 மூட்டையில் பொட்டலங்களாக 249.200 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் லாரியில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட, செல்வக்குமார் (28), மதி (42), ராஜா (38), ராமேஷ் (24) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.