சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கம்-1 முதல் 2 பகுதிகளுக்குட்பட்ட காமராஜர் நகர், ஜே.ஜே. நகர், எஸ்.வி.எம். நகர், உலகநாதபுரம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவாரம் குப்பம், அண்ணா நகர், கமலாம்மாள் நகர், சின்னக்குப்பம், காந்தி நகர், இந்திரா நகர், காட்டுக்குப்பம், நேரு நகர், பெரியக்குப்பம், திலகர் நகர் மற்றும் வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு சென்னை குடிநீர் வாரியம், திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட் லேனில் உள்ள பகுதி அலுவலகம்-1ல் வரும் 19ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.