ஆத்தூர், அக்.16: சேலம மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் 88வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கல்லேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அமுதா தலைமையில் டாக்டர் அப்துல்கலாம் திருவுருவ படத்திற்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர் ஜோசப்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாப்பநாயக்கன்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் சங்கர் தலைமையில் கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆத்தூர் அருகே மல்லியகரை ராசி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில், “கீரின் கலாம்” என்ற தலைப்பில் மரம் வளர்ப்பினை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகக்குழு செயலாளர் மாசிலாமணி துவக்கி வைத்தார். தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் மணி, கல்விக்குழு தலைவர் கனகராஜன், பள்ளியின் முதல்வர் சுகிதாதினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.