சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் மாத சந்தா தொகை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய சக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் செந்தில் (39). இவர், கோடம்பாக்கம் முருகேசன் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கடந்த ஓராண்டாக ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் 12 பேர் மாத சந்தா வசூலித்து அதை உறுப்பினர்களே பிரித்து கொள்வது வழக்கம். அதன்படி இந்த மாத சந்தா தொகையை உறுப்பினராக உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்த மாதேஷ் (40) என்ற ஆட்டோ டிரைவர் செந்திலிடம் நேற்று முன்தினம் இரவு கேட்டுள்ளார். அதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.