சென்னை: விஜயதசமியை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 460க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விஜயதசமி அன்று சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கல்வித் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் பாரதிதாசன் தலைமையில் சிறப்பு மாணவர் சேர்க்கை முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 119 மழலையர் பள்ளிகள், 91 தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.