சென்னை, அக். 9: சென்னை நுங்கம்பாக்கம் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 110 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரித்து வருகின்றனர்.சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஸ்வநாதன் (43). தனியார் வங்கியில் துணை தலைவராக உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது வீட்டின் சாவியை புஷ்பா நகரை சேர்ந்த வேலைக்கார பெண் சந்தியாவிடம் கொடுத்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் உள்ள பண்ணை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.வேலைக்கார பெண் சந்தியா வழக்கமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சாவியை வீட்டின் கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். பிறகு விஸ்வநாதன் அன்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்து பெட்டியில் இருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்.