ஆலந்தூர், அக். 9: மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில், உடைந்து சேதமான தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருவதால் தொட்டியை மாற்றி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மேற்கு வேளச்சேரி 177 வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் நகர் 3 வது தெருவில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் கடந்த 2 மாதத்துக்கு முன் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கிறது. லாரி மூலம் தண்ணீர் ஊற்றும் போதெல்லாம் தண்ணீர் பிடிக்கும் வரை இந்த ஓட்டையை யாராது கையால் மூடிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த தண்ணீர் தொட்டியினை மாற்றித்தரும்படி இந்த பகுதியில் உள்ளவர்கள் கையெழுத்து வேட்டை நடத்தி அதனை 177வது வட்ட மெட்ரோ குடிநீர் வாரிய உதவி பொறியாளரிடம் மனு கொடுத்தனர்.