சேலம், செப்.25: சேலம் இடைப்பாடி அருகே 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது கொண்ட 10ம் வகுப்பு மாணவியிடம், அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நட்பாக பழகியுள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன் மாணவியை தனியாக அழைத்துச் சென்று, தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வெளியில் சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் வயிறு பெரிதாகியுள்ளது. அதை பார்த்து அவரின் பெற்றோர் கேட்டுள்ளனர். பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்ததில், 3 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அப்போது, தன்னை புதுப்பாளையம் சின்னமுத்தியம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (21), தமிழரசன் (19) ஆகியோர் பலாத்காரம் செய்துவிட்டனர் எனக்கூறியுள்ளார்.