ஓசூர், செப்.25:ஓசூரில் தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல்முறை விளக்கம் ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, பேரிடர் மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். ஓசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முனிராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜா, முருகன், யுவராஜ், சீனிவாசன், ஈஸ்வரன், ராமன், பொன்மணி ஆகியோர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, தீ விபத்துகள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஓசூர் வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம்-கன்னியாகுமரிக்கு முன்னாள் மாணவர்கள் நடைபயணம்காவேரிப்பட்டணம், செப்.25: காவேரிப்பட்டணம் அரசுப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் நடைபயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி காவேரிபட்டணத்திலிருந்து கன்னியாகுமாரி வரை 555 கி.மீ தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர்.