×

சாலை விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ₹2 லட்சம் நிதியுதவி கலெக்டர் வழங்கினார்

நாகர்கோவில், செப்.17: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 456 கோரிக்கை மனுக்கள் நேற்று பெறப்பட்டது. இந்த மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் சுசீந்திரம் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி செல்வி ஆகியோர் 18.06.2019 அன்று சாலை விபத்தில் இறந்த நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ், ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அன்னாரது தகப்பனார் வள்ளிநாயகம் என்பவருக்கு கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல் காசிம் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,road accident ,victims ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...