×

புல்லட் திருடிய 2 பேர் கைது

மேச்சேரி, செப்.15: மேச்சேரி சாம்ராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(35). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவர், கடந்த 8 மாதத்திற்கு முன்பு தனது கடை முன்பு புல்லட்டை நிறுத்திச் சென்றார். மறுநாள் பார்த்தபோது வண்டியை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று காலை, தொப்பூர் செக்போஸ்ட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக புல்லட்டில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் சிவகங்கையைச் சேர்ந்த பாண்டியராஜன்(எ) பிரபு(25), சேலத்தைச் சேர்ந்த சுப்ரமணியம்(32) என்பதும், கடந்த 8 மாதத்திற்கு முன்பு செல்வகுமாரிடம் திருடிய புல்லட்ைட பெங்களூருவில் விற்பனை செய்ய ஓட்டிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து புல்லட்ைட பறிமுதல் செய்தனர். இவர்களில் பிரபு மீது பல்வேறு காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளும், சுப்ரமணியம் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா