ஓசூர், ஆக.22: ஓசூர் ஒன்றியம் சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பியின் 57வது பிறந்த நாள் விழா நேற்று ஓசூரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திண்ணூர் அருகே, பெசோ குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பிரியாணி, இனிப்பு, பாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய வடக்கு செயலாளர் முத்துகுமார் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் முரசுநாடு நன்னன், மாவட்ட அமைப்பாளர் ராஜா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜா, வணிகர் அணி தேவராஜ், கல்வி பொருளாதாரம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரகு, மகேஷ், பால்ராஜ், பெசோ நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.