×

4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

நாகர்கோவில், ஆக.20: கன்னியாகுமரி - புனலூர் ரயில் பாறசாலை ரயில்நிலையத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த ரயிலில் பயணம் செய்த பாறசாலை அருகே நெடுமங்காடு பிரயம் மேக்குகரை பகுதியை சேர்ந்த விஷ்ணு(26) என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், நெடுமங்காடு பகுதிகளில் சில்லறை விற்பனைக்காக மதுரை அருகே கம்பம் பகுதியில் இருந்து வாங்கி வரப்பட்ட கஞ்சா என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விஷ்ணு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  ஜெயிலில் அடைக்கப்பட்டார்.




Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...