×

மயக்க மருந்து கொடுத்து தோழியிடம் செயின் திருட்டு

நாகர்கோவில், ஆக.20: நாகர்கோவிலில் தோழிக்கு மயக்க மருந்து கொடுத்து செயினை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சந்திரா (35). சந்திரா வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள மசாஜ் மையத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, ஆலஞ்சியை சேர்ந்த பிஜூ என்பவரின் மனைவி காயத்ரி(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகளாக மாறியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி காலை சந்திராவின் வீட்டிற்கு வந்த காயத்ரி, தனக்கும் தனது கணவருக்கும் இடையே பிரச்னையாகி விட்டது. எனவே இன்று ஒரு நாள் மட்டும் தங்கி கொள்கிறேன் எனக்கூறி தங்கியுள்ளார். இதற்கு சந்திரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது, காயத்ரி பாதம் பவுடர் மற்றும் பர்கரை சந்திராவிற்கு சாப்பிட கொடுத்துள்ளார். இதன்பின்பு 20 நிமிடத்தில் சந்திரா மயங்கி உள்ளார். அப்போது சந்திராவின் கழுத்தில் கிடந்த சுமார் நான்கரை பவுன்  செயினை, காயத்ரி திருடி சென்றுள்ளார்.
 இதுகுறித்து சந்திரா வடசேரி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ அனில்குமார்  தலைமையிலான போலீசார் தக்கலை பகுதியில் பதுங்கி இருந்த காயத்ரியை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திராவின் வீடு மிகவும் நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ள பகுதியாகும். இங்கிருந்து நகையை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...