×

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசு பள்ளி நூலகத்துக்கு ரூ.1 லட்சம் புத்தகங்கள்

திருப்பூர், ஆக.14: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாணவர்கள் பயன்பாட்டிற்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் அரசு பள்ளி நூலகத்திற்கு வழங்கப்பட்டது.திருப்பூர் அங்கேரிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில், மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்காக நூலகம் ஒன்று சமீபத்தில்  அமைக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் மாணவர்கள் மற்றும் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாணவர்கள் பயன்படும் வகையில், நூலகத்திற்கு புத்தகங்கள் கேட்டு, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.அக்ேகாரிக்கையை ஏற்று, ரூ.1 லட்சம் மதிப்பிலான 500 புத்தகங்களை அவர் வழங்கினார். அந்நூல்களை பள்ளி நூலகத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சிக்குழு நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார்.
இதில், மாநகர யெலாளர் டி.கே.டி.நாகராஜ், மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாநகர அவைத் தலைவர்a ஈஸ்வரமூர்த்தி, தினேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜான் வல்தாரீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்