×

பூதப்பாண்டி அருகே 3 பேருக்கு கத்திக்குத்து ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

பூதப்பாண்டி, ஜூலை 23: பூதப்பாண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (32). அதே பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன். இருவருக்கும் கோயில் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட கோயில் முன்பு வெங்கட்ராமன், அவரது நண்பர்கள் சுரேஷ் என்ற லெட்சுமணன், கணேசன் என்ற முத்துகணேசன் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு முருகன் வந்துள்ளார். திடீரென வெங்கட்ராமனை ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இதனை சுரேசும், கணேசனும் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், வெங்கட்ராமன், சுரேஷ், கணேசன் ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்ைசக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து வெங்கட்ராமன் பூதப்பாண்டி காவல் நிைலயத்தில் புகார் செய்தார். போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...