×

புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கெங்கவல்லி, ஜூலை 23: கெங்கவல்லி தாலுகா கூடமலை ஊராட்சியில், தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி அருகில், அரசு புறம்போக்கு நிலத்தில் கூடமலை பகுதியைச் சேர்ந்த சிலர் கீற்று கொட்டகை அமைத்து கோயில் கட்டும் பணியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், தாசில்தார் சுந்தரராஜன் நேரடி விசாரணை நடத்தினார். அப்போது, கீற்று கொட்டகைளை அப்புறப்படுத்துமாறு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காலை தாசில்தார் உத்தரவின்பேரில், ஆர்ஐ தமிழ்ச்செல்வி மற்றும் விஏஓ ஆனந்தன் ஆகியோர் அப்பகுதியில் இருந்த கீற்று கொட்டைகளை அகற்றி, பொக்லைன் மூலம் அந்த இடத்தை சமன் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா