×

வில்லுக்குறி அருகே வீடு புகுந்து திருட்டு உள்ளூர் ஆசாமிகள் கைவரிசை? கைரேகைகள் சிக்கின

திங்கள்சந்தை, ஜூலை 18: வில்லுக்குறி அருகே சடையமங்கலம் கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (58). மும்பையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் காலை கிருஷ்ணன் தனது மனைவியுடன் கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார். மாலையில் வீடு திரும்பினார். அப்போது முன்பக்க கேட் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ₹55 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த கொள்ளையில் உள்ளூர் ஆசாமிகள் கைவரிசை காட்டி இருக்கலாம்? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அது சம்பந்தமான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதனிடையே கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்து சென்றுள்ளனர்.


Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...