ஓசூர் அருகே அதிகாரி வீட்டில் நகை திருட்டு

ஓசூர், ஜூலை 16:  கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் காலாச்சாரி(43). இவர், ஓசூர் அருகே மத்திகிரி ராமலிங்கரெட்டி லேஅவுட் பகுதியில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபேது பீரோவில் இருந்த 2 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: