உடுமலை,ஜூலை11:உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சமயபுரம் ஆயிர வைசியர் சங்கம் சார்பில் நீலாநாயகி சௌந்திரவள்ளி தாயார் கோயிலில் நேற்று சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன லட்சார்ச்சனை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேகம்,ஆராதனை மற்றும் சுதர்சன ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.