மழை வேண்டி திருப்பதிக்கு சைக்கிள் பயணம்

தாரமங்கலம், ஜூலை 11: தாரமங்கலம் பகுதியில் மழை வேண்டி தொழிலாளர்கள், 4 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பைப்போர், கேஆர் தோப்பூர், கோட்டை மேடு . கே. கே. நகர், நா.பாளையம், மாரிமுத்தான் வளவு, அழகுசமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர் நண்பர்கள் குழு சார்பில் கடந்த 27 ஆண்டுகளாக திருப்பதிக்கு சைக்கிள் பயணம் சென்று வருகின்றனர்.

அதேபோல இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்த காரணத்தாலும், நாட்டில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பிரச்னை தீர மழை வேண்டி ஆன்மிக சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். தாரமங்கலம் ஓடை விநாயகர் கோயிலில் இருந்து தொடங்கிய சைக்கிள் பயணம் தர்மபுரி, திருப்பத்தூர், குடியாத்தம், சித்தூர் வழியாக திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்வதாக குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: