×

போதை பொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம், ஜூன் 27: விழுப்புரத்தில் போதை பொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணியை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.உலக போதைப்பொருள் ஒழிப்பு  தினத்தையொட்டி விழுப்புரம்  போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை விழுப்புரம் பெருந்திட்ட  வளாகத்தில் இருந்து எஸ்பி ஜெயக்குமார் துவக்கிவைத்தார். மேலும் போதை பொருள்களால் ஏற்படும் நோய்கள்  அவற்றால் ஏற்படும் உயிர்ச்சேதங்கள் குறித்து எஸ்பி ஜெயக்குமார்  துண்டுபிரசுரம் விநியோகம் செய்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள்  கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.  நான்குமுனை சந்திப்பு வரை இப்பேரணி சென்றது. கூடுதல் எஸ்பி முகிலன்,  தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை