×

ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

திண்டிவனம், ஜூன்  27:  திண்டிவனம்   அடுத்த சிறுவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தினகரன் (எ) தீனா   (30) ஆட்டோ டிரைவர். இவருக்கும், சரண்யா (23) என்பவருக்கும் திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாததால் அடிக்கடி குடும்ப   தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தினகரன் வீட்டில் தூக்கு போட்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை   மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை   பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை