×

அரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு

திண்டிவனம், ஜூன் 26: திண்டிவனம் அடுத்த மேல்பாக்கத்தில் இயங்கிவரும் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் போதுமான வகுப்பறை இல்லாததால் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து ரூ.1கோடியே 54 லட்சம் மதிப்பிலான எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடத்தை நேற்று தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மயிலம் எம்எல்ஏ டாக்டர் மாசிலாமணி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் ராஜாராம் மற்றும் திமுகவினர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை