குடிநீர் விநியோகம் கேட்டு பஞ்.அலுவலகம் முற்றுகை

ஊத்தங்கரை, ஜூன் 21:  ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட  கென்னடி நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு வாரமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல இடங்களில் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் ஆவேசமடைந்த 150க்கும் மேற்பட்டோர், நேற்று காலி குடங்களுடன் சிங்காரப்பேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: