ஊத்தங்கரை, ஜூன் 21: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கென்னடி நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு வாரமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல இடங்களில் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் ஆவேசமடைந்த 150க்கும் மேற்பட்டோர், நேற்று காலி குடங்களுடன் சிங்காரப்பேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.