×

மதுரை கொலை வழக்கில் தொடர்பு திருப்பூரில் சிறுவன் கைது

திருப்பூர், ஜூன் 21:மதுரை கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவனை திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்குளி ரோடு கோல்டன் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 16 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் அவன் மதுரை, மேலூர் கீழவலசு போலீஸ் நிலைய பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய குற்றவாளி என்பது தெரியவந்தது.  பின்னர் இது குறித்து திருப்பூர் போலீசார் கீழவலசு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து கீழவலசு போலீசார் சிறுவனை பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்து சென்றனர்.

Tags : Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை