கிருஷ்ணகிரி, ஜூன் 13: கிருஷ்ணகிரியில் நாளை (14ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலலவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் விருப்பமுள்ள வேலையளிப்பவர்களும், வேலைநாடுநர்களும் கலந்துகொள்ளலாம். அதன்படி நாளை (14ம் தேதி) காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.