ஆத்தூர், ஜூன் 11: ஆத்தூர் நகராட்சி சார்பில், அனைத்து பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சிப்பள்ளி மற்றும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 17 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு நோய்கிருமிகள் தாக்குதலிருந்தும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையிலும் நிலவேம்பு காசாயம் வழங்க நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் முதற்கட்டமாக நேற்று மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.