போச்சம்பள்ளி, ஜூன் 11: போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் தாகத்தை போக்க குடிநீர் தொட்டி அமைப்பது என வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போச்சம்பள்ளியில் அனைத்து வணிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கேசவன் கலந்து கொண்டு பேசினார். போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மற்றும் மக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.