கிருஷ்ணகிரி, ஜூன் 11: கெலமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சித்திரன், ஸ்ரீகண்டன், செல்வராஜ், சந்திரசேகரன், முருகேசன், சதீஸ்குமார், வீரபத்திரன் ஆகியோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதம் ₹250 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால், வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் அனைவருக்கும் பணியை நிரந்தரமாக்கி, ஊதிய உயர்வு வழங்குமாறு தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினோம்.