பெத்தநாயக்கன்பாளையம் மலை கிராம பள்ளியில் செம்மொழி தின விழா

ஆத்தூர், ஜூன் 7: பெத்தநாயக்கன்பாளையம், மலை கிராம ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தமிழ் செம்மொழி தின விழா கொண்டாடப்பட்டது. பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா மண்ணூர் மலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தின விழா, உதவி தலைமையாசிரியர் வெங்கடாசலம் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து,  ஆசிரியர் ஜோசப்ராஜ் மாணவ, மாணவிகளிடம் விளக்கினார்.இதன் பின்னர் மாணவ, மாணவிகள் தமிழ் என்னும் வடிவத்தில் அமர்ந்து யோகாசனம் செய்தனர். நிகழ்ச்சியில் மலைகிராம மக்கள் உட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: