சென்னை: பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரத்திற்கு சொந்தமான காலி இடத்தில் குடிபோதையில் காவலாளியிடம் தகராறில் ஈடுபட்ட சினிமா உதவி இயக்குநர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் முதன்மை சாலையில் பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 10 கிரவுண்டு நிலம் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுவர் அமைத்து, காவலாளி ராஜா என்பவரை பணியில் நியமித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 5 வாலிபர்கள் பாடகருக்கு சொந்தமான கேட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இதை பார்த்த காவலாளி ராஜா அந்த 5 பேரையும் தட்டிக்கேட்டுள்ளார். ஆனாலும் அவர்கள் காவலாளியை மிரட்டி விட்டு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.