பெரம்பூர்: வியாசர்பாடி கென்னடி நகரை சேர்ந்தவர் பாண்டியன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் பாண்டியன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாண்டியன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். வலிதாங்க முடியாமல் வீரம்மாள் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.