குடும்ப தகராறில் விபரீதம் மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் கைது..

 பெரம்பூர்: வியாசர்பாடி கென்னடி நகரை சேர்ந்தவர் பாண்டியன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (37).  இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் பாண்டியன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாண்டியன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். வலிதாங்க முடியாமல் வீரம்மாள் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

இதை பார்த்து பாண்டியன் தப்பியோடினார். தகவலறிந்து வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வீரம்மாளை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீரம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: