சென்னை: சென்னை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் போக்சோ வழக்கறிஞர் பணிக்கு விணணப்பிக்கலாம் என்று சென்னனை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் ஆணையின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை பாலியில் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (போக்சோ சட்டம்) பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் மற்றும் உரிமையியல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.