துரைப்பாக்கம்: செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கேன்டீனில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கேன்டீனில் பணிபுரியும் 150 பேரை கல்லூரி நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.